Pages

Tuesday, June 4, 2013

நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.


( SAFRAN BIN SALEEM – அக்குரணை)

பொது பல சேன , சிங்ஹலே ராவய போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அநுராதபுர ஸியாரத்தில் தொடங்கிய அவர்கள் பல பள்ளிவாசல்கள் , எமது உரிமைகளில்லெல்லாம் கை வைத்துள்ளார்கள். ஹலால் விவகாரத்தை பூதாகரமான பிரச்சினையாக மாற்றியது  மட்டுமல்லாது இன்று புர்கா, இஸ்லாமிய வங்கி முறைமை என்று இன்னும் பல வற்றில் கை வைக்க தொடங்குகிறார்கள்.
ஆனால் எமது சமூகம் ஆரம்பம் முதல் தன்னால் இயன்ற அளவு பொறுமை காத்து வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது இனவாத செயற்பாடுகளை விஸ்தரித்துக்கொண்டனர்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் எவ்வளவோ விளக்கங்களை கொடுத்தும் இன வாதம் ஓய்வதாக இல்லை.
குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்பதற்கினங்க நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் காட்ட வேண்டும் என INAMULLAH MASIHUDEEN (NALEEMI) அவர்கள் வெளியிட்ட கருத்தை ( http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_5381.html ) நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.
இவ்வாறு நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஞாபகப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.
1.       இஸ்லாமிய வரையரைகளை முழுமையாக பேணல்.
2.       நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும் போது கைகளில் தேசியக் கொடிகளை ஏந்துதல்.
தேசியக் கொடிகளை அதிகமாக பறக்க விடல்.
3.       நாம் இலங்கையர்கள் ,இது எமது தாய் நாடு என்ற உணர்வுடன் செயற்படல்.
4.       தென்னிந்தியாவில் விஸ்வரூபம் படத்துக்கெதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தது போல் எம்மத்தியிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர வேண்டும்.
5.       ஆரவாரமின்றி அமைதியாக எமது எதிர்ப்பினை காட்ட வேண்டும்.
6.       எமது குரல்கள் , சுலோகஙோகள் நாட்டுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது.
7.       எமது குரல்கள் , சுலோகஙோகள் பௌத்த மதத்தையோ, ஏனைய மதங்களினையோ தாக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது. . (பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.)          
எமது நிலமையினை , கருத்துக்களை கச்சிதமாக எத்தி வைக்க வேண்டும்.
8.       ஊர் தலைமைகள் முழுமையான முறையில் ஒழுங்கு படுத்தி நெறிப் படுத்த வேண்டும்.
9.       நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் காட்ட வேண்டும்
10.   இயன்ற அளவு மாற்று மத சகோதரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
11.   இன்னும் பல......................................................................................................................


அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.



   


பன்றி இறைச்சியும் பாராளுமன்றமும்


(சிட்டகொங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்திலிருந்து SAFRAN SALEEM – அக்குரணை)

இலங்கை திருநாட்டில் சட்டமியற்றும் அதி உயர் அதிகாரம் கொண்ட நிறுவனம் பாராளுமன்றம் ஆகும். எந்தவொரு சட்டமும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பெறும்பான்மை ஆதரவு இருப்பின் சட்டம் அங்கிகரிக்கப்படும். எமது பாராளுமன்றத்தில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எப்பாகுபாடுமின்றி உறுப்பினர்கள் தெரிவாகின்றனர். இதன் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் சபாநாயகர் பதவியில் எமது முன்னோர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். (பாக்கிர் மாக்கார், M.H. மொஹமட்)
பாராளுமன்றம் போலவே எமது நாட்டின் சகல அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் முஸ்லிம்கள் ஏனைய மதத்தினருடன் இரண்டரக்கலந்து கடமை புரிகின்றனர்/கற்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாமிய வரையறையினுல் செயற்பட்டும் தமது கலாச்சாரத்தை பேணியும் வரலாறு நெடுகிலும் வந்துள்ளமையை வரலாறே சான்று பகர்கின்றது.
ஆனால் ஓரிரு வாரங்களுக்கு முன் பாராளுமன்றம் உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்ற சமயலறையில் பன்றி இறைச்சி சமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் பின் முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்களும், சில ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை எதிர்த்து சபாநாயகருக்கு விண்ணப்பித்தனர். ஆனால் ஒரிரு முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்கள் மட்டுமே ஊடக அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்னர் சபாநாயகர் பன்றி இறைச்சி சமைக்கும் பிரேரனையை நிராகரித்தார். ஆனால் சாப்பாட்டு முறையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது. இது குறித்து சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இது குறித்து முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எடுத்துள்ளார்களா…….?  

இச் சந்தர்ப்பத்தில் எம் மத்தியில் சில கேள்விகள் உதிக்கின்றது..............................!
இவ்வளவு காலமாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டு முறையில் ஏன் இந்த திடீர் மாற்றம் ?
திடீரென பன்றி இறைச்சி கோரப்படுவதன் நோக்கம் என்ன….?
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதிகளில் இதுவும் ஒன்றா….?
முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது என அப் பாராளுமன்றம் உறுப்பினர்கள்  அறியாதவர்களா ? 
ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் கடமை புரிகின்ற/கற்கின்ற முஸ்லிம்களது கதி என்ன ?
ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் பன்றி இறைச்சி வினியோகிக்கப்படாது என உத்தரவாதமளிக்க முடியுமா ?
பாராளுமன்றத்திலே பன்றி இறைச்சி வினியோகிக்கப்பட்டு விட்டால் ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் பன்றி இறைச்சி வினியோகிக்கப்படாது என கூற முடியாது. அண்மையில் குண்டசாலை விவசாயக்கல்லூரியில் பன்றி இறைச்சி வினியோகிக்கப் பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது இத்துடன் முடியும் என கூற முடியாது.
பன்றி ஹராமாக்கப்பட்ட உணவு என்பது ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்ததேயாகும். ஹராத்தை உண்டு வளர்ந்த உடல் அனைத்தும் நரகத்துக்கே தகுதியானது (அல் ஹதீஸ்)”.
இச்சந்தர்ப்பத்தில் எமது பொறுப்பு என்ன ?
இப் பிரச்சினை பாராளுமன்றத்தில் தானே என நம்மால் இருக்க முடியாது. பாராளுமன்றத்திலே இந் நிலமை என்றால் நாளை எமது காரியங்களில் , திணைக்களங்களில், பல்கலைகழகங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில்வைத்தியசாலைகளில், நீதிமன்றங்களில் இப் பிரச்சினை வர மாட்டாது என கூற முடியாது. ஆகவே இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமுள்ள பிரச்சினையல்ல. மாறாக முழு இலங்கை முஸ்லிம்களினதும் பிரச்சினையாகும். இதனை முளையிலே கிள்ளியெறிய வேண்டியது இலங்கை முஸ்லிம்களினது குறிப்பாக அரசியல் தலைமைகளினது அவசர பொறுப்பாகும். இது விடயத்தில் ஜம்மியத்துல் உலமா உடணடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
யா அல்லாஹ்……..!                                                                                                                                 எமது உடலினுல் எம்மை அறிந்தோ அறியாமலோ ஹராமான உணவு உட்புகு வதைவிட்டும் எங்களை பாதுகாப்பாயாக.
                             ஆமீன்.             

     


இலங்கை முஸ்லிம் இளைஞர் சமூகமே இது உங்கள் கவனத்திற்கு...........!



SAFRAN BIN SALEEM

இலங்கையை பொறுத்தவத்த வரை அல்லாஹ்வின் கிருபையால் இன்று நிதி, நீதி, நிர்வாக, கல்வி உட்பட பல்வேறு பட்ட அரச உயர் பதவிகளில் எமது முஸ்லிம் கல்விமான்கள் அமைச்சு, அரச திணைக்களங்கள், சபைகள் உட்பட பல நிறுவனங்களில்  பதவி வகிக்கின்றனர் . ஆனால் அவர்கள் குறித்த காலத்தக்குப் பின் ஓய்வு பெற்று செல்ல உள்ளனர். அவர்களின் ஓய்வுக்கு பின் அந்த இடை வெளியினை நிரப்ப இன்றைய இளைஞர் சமூகமான நாம் தயார் நிலையில் உள்ளோமா என்பது வினாக்குறியாகவே உள்ளது.
இளைஞர் சமூகம் இத்துறைகளில் காட்டுகின்ற ஆர்வம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது வெளிப்படையே ஆகும். இதற்கு எடுத்து காட்டாக அண்மைக்காலங்களில் நடை பெற்ற இலங்கை அரச நிர்வாக சேவைக்கு(SLAS) தேர்ந்து எடுப்பதற்காக நடை பெறும் பரீட்சை பெறு பேறுகள் காணப்படுகின்றன. இப் பரீட்சைகளில் தெரிவாகும் முஸ்லிம்களின் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. 
எனவே எமது முன்னோர் எமக்கு பெற்றுத் தந்த உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், எதிர் காலத்தில் எமது இருப்பை உறுதி செய்வதற்கும் அரச உயர் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எனவே இளைஞர் சமூகமே எமது எதிர் காலத்தை பற்றி சிந்திப்போம், எமது சமுதாயத்தின் எதிர் காலத்தை பற்றி சிந்திப்போம்.  எம் சமூகத்துக்கும், எமது நாட்டுக்கும் விசுவாசத்துடன் எம்மாலான சேவைகளை செய்வோவோம் என திட சங்கற்பம் பூணுவோம்.



இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிமினதும் கவனத்திற்கு................................!


(சிட்டகொங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்திலிருந்து SAFRAN BIN SALEEM – அக்குரணை)

கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை முஸ்லிம்களின் மீது பௌத்த பேரினவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத நடவடிக்கைகள் பல ரூபங்களை அடைந்து இன்று ஓய்வடைந்து உள்ளது. ஆனாலும் அதன் தாக்கங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அவ் இனவாத அமைப்புக்கள் தனது குரலை அடக்கி வாசிக்கத்தொடங்கியுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் எம்மீதுள்ள கடப்பாடுகள் குறித்து ஆராய வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.
அந்த வகையில் இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிம் மீதும் உள்ள சில கடப்பாடுகள் சில வருமாறு
1.       ஒவ்வொருவரு முஸ்லிமும் ஆன்மீக ரீதியில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லுகின்ற , காட்டித் தந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். நம்பிக்கைகுரியவர்களாக , வாக்கு மீறாதவர்களாக திகழ வேண்டும்.
2.       ஒரு நாட்டில் ஒரு சமூகமானது அதிலும் குறிப்பாக சிறுபான்மை சமூகமானது அச் சமூகத்தின் வரலாற்றை அறிந்து வைப்பதும் குறிப்பாக தொகுத்து வைத்திருப்பது அந் நாட்டில் அச் சமூகத்தின் இருப்புக்கு அத்தியவசியமானதாகும். இலங்கையில் சிறுபான்மையாக வாழும்  முஸ்லிம்களின் வரலாறு குறித்துப் பார்த்தால் , முஸ்லிம்களாகிய எங்களுக்கே பூரண தெளிவு இல்லாது இருக்கிறதுஎமது வரலாறு முழுமையாக தொகுக்கப்பட்டு அது பொது மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
3.       எமது சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், முஸ்லிம்களுக்கோ அல்லது இஸ்லாத்திற்கோ எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால்    அல்லது எமது உரிமைகள் மீது கை வைப்பார்களானால் உடனடியாக தகுந்த ஆதாரங்களோடு பொலீஸில் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனித உரிமை ஆனைக்குழு போன்றவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
4.       எமது சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக பல சாராராலும்  உணரப்பட்டுள்ள அச்சு, இலத்திரனியல் ஊடகத் தேவையை உடனடியாக துறை சார்ந்தோர், வசதி படைத்தோரும் ஒன்றினைந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
5.       எமது சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அல்லது எமது உரிமைகள் மீது கை வைப்பார்களானால் அதனை உடனடியாக எம்மத்தியில் சிங்கள , ஆங்கில மொழி அறிவு , எழுத்தாற்றல் உள்ளவர்கள் தேசிய, சர்வதேச சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும் , சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும். அத்துடன் இஸ்லாம் பற்றியும் , முஸ்லிம்கள் பற்றியும் தேசிய சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும் , சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும்.
6.       எம்மத்தியில் (ஊர் வாரியாக) சிறந்த ஆரோக்கியமான சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்கி மது வணக்கஸ்தலங்களையும் , மத்ரஸாக்களையும் , கலாச்சாரத்தையும் , சின்னங்களையும் , உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாக்க ஆரோக்கியமான திட்டங்களை வகுத்தல் வேண்டும்.
7.       கடந்த காலங்களில்  நாம் விட்ட தவறுகளை நாம் இனங்கண்டு அவற்றை இயன்றளவு திறுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

யா அல்லாஹ்..............................!
இலங்கை மற்றும் சர்வதேச முஸ்லிம்களையும் , மஸ்ஜித்களையும் , மத்ரஸாக்களையும் , இஸ்லாமிய சின்னங்களையும், உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாத்தருள்வாய்க.
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற தலைவர்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளைக் கொடுப்பாயாக. எதிரிகளின் சதிகளிலிருந்து அவர்கள் உட்பட முழு முஸ்லிம் உம்மாவையும் பாதுகாப்பாயாக.
                                                                 ஆமீன்.


நினைவுட்டப்பட வேண்டிய எமது வரலாற்றின் சில துளிகளும் எமது கடமைகளும்



SAFRAN BIN SALEEM -AKURANA

இன்றைய காலகட்டத்தில் சில குழுக்கள் எமது நாட்டை இன்னுமொறு யுத்தத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது. இவ் யுத்தத்தை நவீன ஊடகங்களினூடாகவும் (முகப்புத்தகம் -FACE BOOK) மேற்கொள்ள முயற்சிக்கின்றன, அதே வேளை சிங்கள , முஸ்லிம் மக்கள் மத்தியிலே பெரியதோர் புரிந்துணர்வின்மையை வளர்க்க முயற்சிக்கின்றனர். ஆகவே இறந்த காலத்தில் இலங்கையராக நாம் என்ன செய்தோம் , வருங் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை மாதாவிற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு குறித்து சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
1.       ஆங்கிலயேர் இலங்கை மன்னன் ராஜசிங்கனை கொல்வதற்காக விரட்டி வரும் போது அவர் ஒரு மரத்தின் பின்னால் ஒழிந்து கொண்டார். இதனை ஒரு முஸ்லிம் பெண்மணி அவதானித்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலய படை அவளிடம் கேட்ட போது அவள் மௌனம் காத்தாள். இறுதியில் அவள் ஆங்கிலயே படையினரால் கொல்லப்பட்டாள். அப்பொழுது மன்னன் ராஜசிங்கன் அப் பெண்மணியை பார்த்து மா ரெக லே (என்னை பாதுகாத்த இரத்தம்) என்று சொன்னார்.
இச் சம்பவம் இந் நாட்டுக்காக தம்மை அர்ப்பனித்தமையை சான்று பகர்கின்றது .                                                                                                                
2.       வெளிநாட்டவர்கள் உட ரட்டை ராஜதானியை கைப்பற்ற வந்த போது அதிகளவான முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் இனைந்து வெளிநாட்டவர்களுக்கு எதிராக போரிட்டனர்.
3.       மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரை சேர்ந்த உமர் லெப்பை மரிக்கார் என்பவர் யானை ஒன்றினை தளதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்தார். அதனால் அவர் 1000 ரூபா தாளில் ஞாபகப் படுத்தப் படுகின்றார்.
4.       மாரச் 21ஆம் திகதி ஏன் பொலிஸ் தினம் கொண்டாடப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா?
மாரச் 21ஆம் திகதி அன்று தான் தன் தாய் நாட்டுக்காக முதன் முதலாவதாக ஒரு பொலிஸ் அதிகாரி உயிர் தியாகம் செய்தார். அவரின் பெயர் மொஹமட் ஸபான். இவர் ஒரு முஸ்லிம்.
5.       இலங்கை சுதந்திரத்துக்காக உழைத்தவர்களில் சித்தி லெப்பை , டி.பி. ஜாயா போன்ரோர் முக்கிய உதாரணபுருஷர்களாவர்.
6.       கடந்த கால யுத்தத்தில் முக்கிய இராணுவ புலனாய்வு அதிகாரியாக செயற்பட்டு LTTE இனால்கொல்லப்பட்ட கேர்னல் முத்தலிப் அவர்களின் நாட்டிக்கான சேவை நினைவுட்டத்தக்கது.
7.       ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களினது ஆட்சிக்காலத்தில் முக்கிய பல அமைச்சுப் பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.
உதாரணமாக
   நைநா மரிக்கார் - நிதி அமைச்சர்
   A.C.S ஹமீத்        - இலங்கையின் முதலாவது வெளிவிவகார அமைச்சர்

8.       அமரர். திரு.S.W.R.D பண்டாரநாயக்க அவர்களின் கருத்து சிங்களவர்களது வரலாற்றை போன்றே அதே அளவு கால வரலாற்றை இலங்கை சோனகர்களும் கொண்டிருக்கின்றனர். இவ்விரு சமூகங்களும் வரலாறு நெடுகிலும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்.
9.       அமரர். திரு. சேநாநயக்க அவர்களின் கருத்து இலங்கை சோனகர் சமூகமானது இலங்கையின் முக்கியமான சமூகங்களில் ஒன்று. வர்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அவர்களது கையில் வர்தகத்தை ஒப்படைக்க வேண்டும்.
10.   அமரர். Sir ஒலிவர் குணதிலக அவர்களின் கருத்து
   2ம் உலக மகா யுத்ததின் போது இலங்கை சோனக சமூகமானது என்னுடன் சிறந்த முறையில் பங்களிப்பு செய்தனர். அவர்கள் எந்த நாட்டிலும் தேசபற்றுடன் வாழக்கூடியவர்கள் என்பதை அவர்களது பழக்க வழக்கங்கள் நிரூபிக்கின்றன

 முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை தாய் நாட்டுக்காக பல அர்பணிப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் வருங் காலத்திலும் அதே போல் மேற்கொள்வார்கள்.
முஸ்லிம் சகோதரர்களே நாங்கள் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அதிகளவு பங்களிப்புக்களை செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் வருங் காலத்திலும் அதே போல் மேற்கொள்வோம். மேலும் பௌத்த, இந்து, மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களுடன் தொடர்ந்தும் நல்லுறவை பேண வேண்டும்.  நாட்டை கட்டியெழுப்புவதில் என்றும் முன்னனியில் திகழ்வோம்.


நன்றி:-  1>Foundation for Advancement of Science
                       Hemmathagama
                      www.facebook.com/FAScHemmathagama
                  2>Brother: M.H. Mohamed -Puttalam



சிந்திப்போம் செயற்படுவோம்

சிந்திப்போம் செயற்படுவோம்

SAFRAN BIN SALEEM -AKURANA

இனவாத செயற்பாடுகள் இன்று இலத்திரனியல் ஊடகங்களினூடகவும் முடுக்கி விடப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உதாரணமாக FACE BOOK, TWITTER இனூடாக இனவாத துவேஷ கருத்துக்களை இனவாதிகள் பரப்பி வருகிறார்கள். அதற்கு எம்மில் சிலர் பதில் கருத்து (COMMENT) கொடுக்க முற்படும் போது அவர்கள் பானியிலே கருத்து (COMMENT) களை முன்வைக்க முற்படுகிறார்கள். இதனால் அங்கு இரு மதங்களும், இனங்களும் சீண்டப்படுகின்றது.
அவ்வாறு கருத்து தெரிவிப்பின் குறித்த இனவாத அமைப்புக்கள் குறித்தும், இனவாதிகள் குறித்தும் மட்டுமே கருத்து வெளியிடவேண்டும். மாறாக கருத்து வெளியிடும் பட்சத்தில் நாமே இன விரிசலுக்கு காரணமாகி விடுவோம்.  
ஆகவே ஆவேசமான முறையில் எமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாது நிதானமான முறையில் சிந்தித்து செயற்படல் வேண்டும். FACE BOOK இல்COMMENT பண்ணும் போது நாகரிகம் பேண வேண்டும். ஏனைய மதங்களை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
மேலும் காவிப் பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை பாவிப்பதை அனைத்து மட்டத்திலுள்ளவர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.  தேரர்ரகளில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனை மனதில் நிறுத்த வேண்டும். அதே போல் பௌத்த மதத்தயோ, சிங்கள இனத்தையோ சீண்டி கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்ந்து கொள்ளல் வேண்டும். பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனையும் மனதில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது மார்க்கத்தை எத்திவைக்கும் விதத்திலும் உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கருத்துக்களை அதிகம் அதிகம் வெளியிட வேண்டும். அதன் மூலம் இனவாதிகளின் கருத்துக்களுக்கு அடிமையாகும் சாதாரன மக்களுக்கு உண்மையை புரிய வைக்கலாம்.    





சமூகத்திலுள்ள களைகளை பிடுங்குவோம்

சமூகத்திலுள்ள களைகளை பிடுங்குவோம்

( SAFRAN BIN SALEEM )

இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்களது இலக்குகள் பள்ளிவாசல்கள், மத சின்னங்கள், ஹிஜாப், ஹலால், வர்த்தகம்,  உரிமைகள் என பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றன. அவர்கள் இனவாத செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துகின்றனர்.   
அல்லாஹ்வின் கிருபையால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் சில அமைப்புக்கள்  இலங்கை  முஸ்லிம்  சமுகத்துக்கு அளப்பரிய சேவையை பல வகையிலும் செய்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் ஆகும். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா மேலும் மேலும்  அருள்பாளிக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக இனவாதிகள் ஒரு பக்கம்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் எம்மில் சில அமைப்புக்களும் தனி நபர்களும் எதிரான நச்சுக்கருத்துக்கருத்துக்களை பரப்பி வருகின்றமை கவலையான விடயமாகும். இவர்களைப்போல் இன்னும் சில சமூகத்தை காட்டிக் கொடுக்கும் நயவஞ்கர்களும் நம்மில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை ஆகும். இக் களைகளை இனங் கண்டு பிடுக்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும்.
பல பள்ளிவாசல்கள் இனவாதிகள் தாக்கப்பட்டிருந்த போதும் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளில் ஒருவர் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்று சொன்னமையை என்னவென்று சொல்ல முடியும்.
அது மட்டுமல்லாது அண்மையில் அரசில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சி ஒன்றினூடாக கொழும்பு மா நகர சபைக்கு தெரிவான முஸ்லிம்  பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் அவர் ஒரு முஸ்லிமா? என சிந்திக்க வைத்தது. அவருடைய கருத்துக்கள் வருமாறு
1.   ஹலால் என்பது ஒரு முட்டாள் தனமான ஹராம்.
2.   புர்கா அடிப்படை வாத்தைத் தோற்று விக்கிறது. பெண்களின் ஆடை முறைக்கு உதாரணமாக ஷேக் ஹஸீனாவையும், பெனாஸிர் பூட்டோவையும் சொல்கிறார். எமது பெண்களுக்கு முன்மாதிரி உம்மஹாதுல் முஹ்மினீன்களும், ஸஹாபா பெண்மணிகளுமே என்பதை இவர் அறிய வில்லையா?
இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவோர் எமது சமுகத்துக்கு அளப்பரிய சேவையை பல வகையிலும் செய்து வரும் அமைப்புக்களிடம் அவர்கள் குறை காணும் விடயங்களை குறித்து கலந்துரையாடாது, ஆலோசனைகளை வழங்காது நேரடியாக ஊடகங்கள் முன் வந்து விமர்சிக்கிறார்கள். இவர்களது கருத்துக்கள் இனவாதிகளின் இனவாத செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக காணப்படுகிறது. இவர்கள் இதன் மூலம் சமூகத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அண்மையில் எதிர் கட்சித் தலைவர் சொன்னது போல் ஹலால் விடயத்தில் எமது சமூகமே மூன்று கருத்தில் காணப்படுகிறது. எமது அறியாமை, சுய லாபம், பொடு போக்கு, சமூக அக்கறையின்மை போன்றவையே இதற்கு காரணம்.  ஊர் பிளவு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதனை மனதில் நிறுத்த வேண்டும்.
இவர்கள் போன்ற சமூகத்திலுள்ள களைகளை இனங் கண்டு பிடுங்க வேண்டியது சமூகத்தின் அவசரமானதும் அவசியாமானதுமான கடமையாகும்.   அறியாமையிலுள்ளவர்கள் கருத்துக்களை வெளியிடாது குறித்த விடயம் சம்பந்தமான அறிவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட குரோதங்களை மறந்து சமூகப் பற்றுடன் ஒன்று சேர வேண்டும்.